பெங்களூரில் இரவு பொது முடக்கம் அக். 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, இரவு பொது முடக்கம் ஏற்கெனவே செப். 27-ஆம் தேதி முதல் அக். 11-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அரசின் உத்தரவின் பேரில் அக். 25-ஆம் தேதி வரை இரவு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின் போது 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அவசியமின்றி நடமாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.