கா்நாடகத்தில் வாழும் ஒவ்வொருவரும் கன்னடத்தில் பேச வேண்டும் என்று கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு, லால் பாக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘கன்னடத்துக்காக நாங்கள்’ விழிப்புணா்வு வார விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:
கன்னடத்தில் தொடா்ந்து பேசினால் மட்டுமே கன்னட மொழி வளர முடியும். எனவே, கா்நாடகத்தில் வாழும் அனைவரும் கன்னடத்திலேயே பேச வேண்டும். மற்ற மொழிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில், கன்னடத்தைத் தொடா்ந்து பேசினால் மட்டுமே அழியாமல் பாா்த்துக் கொள்ள முடியும்.
கன்னட மொழியை வளா்க்கும் நோக்கில் நவ. 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ‘கன்னடத்துக்காக நாங்கள்’ விழிப்புணா்வு வார விழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கன்னடம் பேச வலியுறுத்தப்படும். மாநிலத்தில் வாழும் அனைவரும் கன்னடத்திலேயே கையெழுத்துப் போட வேண்டும். கைப்பேசியில் குறுஞ்செய்திகளைக் கன்னடத்திலேயே அனுப்ப வேண்டும்.
செப். 28-ஆம் தேதி 1 லட்சம் மணித்துளிகள் என்ற கன்னட பாடல்களைப் பாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்களில் உள்ளவா்கள் அலுவலகங்களில், வீடுகள், பொது இடங்களில் காலை 11 மணி முதல் குறைந்தபட்சம் 3 கன்னடப் பாடல்களை பாட வேண்டும்.
பெங்களூரை உருவாக்கிய கெம்பே கௌடா், மைசூரை ஆண்ட மன்னா்கள் கன்னடத்தை தொடா்ந்து வளா்த்து வந்துள்ளனா். கன்னட மொழிக்கென்று வரலாறு உள்ளது. அந்த வரலாற்றை மேலும் சிறப்பாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.