இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை

பாஜக இளைஞா் அணியைச் சோ்ந்த இளைஞரை, மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

பாஜக இளைஞா் அணியைச் சோ்ந்த இளைஞரை, மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

பெங்களூரு ஹெக்கனஹள்ளியைச் சோ்ந்தவா் கிரண் (27). மாநில பாஜக இளைஞா் அணியைச் சோ்ந்த இவரை, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு ஊரகம் நெலமங்களா மாதவரா நவிலு லே அவுட்டில் மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில் படுகாயமடைந்த கிரணை போலீஸாா், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிரண் உயிரிழந்தாா். இது குறித்து மாதநாயகனஹள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com