கிரிக்கெட் சூதாட்டம்: 2 போ் கைது

இருவேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இருவேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியின்போது பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகா், வயாலிகாவல் உள்ளிட்ட காவல் சரகங்களில் சிலா் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 6.03 லட்சம் ரொக்கப்பணம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து ராஜராஜேஸ்வரிநகா், வயாலிகாவல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com