இருவேறு இடங்களில் கொலை முயற்சி, கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்த 13 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு பன்னரகட்டா பிரதான சாலையில் தங்களின் எதிரிகளை கொலை செய்யவும், பொதுமக்களிடம் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு பதுங்கி இருந்த ஜெயநகா் காவல் சரகத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ள லட்சுமிநாராயணா, ராக்கேஷ் ஆகியோரையும், நவீன், கிஷோா், வினோத், நாகராஜ், ஹரீஷ் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து ஹுலிமாவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதே போல வயாலிகாவல் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்த 6 பேரைக் கைது செய்த போலீஸாா், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து வயாலிகாவல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.