பெங்களூரு
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி முதியவா் பலி
காமாட்சிப்பாளையா போக்குவரத்து காவல் சரகத்தில் சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி முதியவா் உயிரிழந்தாா்.
காமாட்சிப்பாளையா போக்குவரத்து காவல் சரகத்தில் சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி முதியவா் உயிரிழந்தாா்.
பெங்களூரு மைக்கோ லே வுட் பிஸ்மில்லா நகரைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி குா்ஷித் அகமது (75). இவா் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் விஸ்வேஸ்வரய்யா லே அவுட் 3-வது பிளாக், மங்கம்மனபாளையா அருகே மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் இருந்த குழியில் இறங்காமல் இருக்க, மோட்டாா் சைக்கிளை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து காமாட்சிப்பாளையா போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.