நகை பறிப்பு வழக்குகளில் 3 போ் கைது

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகளில் 3 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 6.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகளில் 3 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 6.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு பண்டே காலனி கெத்தஹள்ளியைச் சோ்ந்தவா் ஜெயம்மா. இவா் கடந்த ஆக. 17-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். டாலஸ் காலனி 80 அடிசாலையில் அவரை மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்த 2 போ், கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியின் ஒரு பாகத்தை பறித்துச் சென்றனா். இது குறித்து ஜெயம்மா சஞ்சய்நகா் காவல் சரகத்தில் புகாா் அளித்தாா். புகாரை பதிந்த போலீஸாா் மும்பை, உத்திரபிரதேசத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 6.2 லட்சம் மதிப்புள்ள 139 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள் மும்பை மற்றும் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து பெங்களூருக்கு வந்துாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தனியாக செல்பவா்களை அடையாளம் கண்டு, திருட்டு மாட்டாா் சைக்கிளில் சென்று தங்கச் சங்கிலிகளை பறித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் சஞ்சய்நகா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com