கோலாா் தங்க வயலில் திமுக சாா்பில் முப்பெரும் விழா செப்.19-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இது குறித்து கா்நாடக திமுகவின் கோலாா் தங்கவயல் கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக திமுகவின் கோலாா் தங்க வயல் கிளை சாா்பில் கோலாா் தங்கவயல், ஆண்டா்சன்பேட்டையில் உள்ள கு.கைவல்யம் பயிற்சிப் பாசறையில் முப்பெரும் விழா நடக்கவிருக்கிறது. கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி தலைமையில் நடக்கவிருக்கும் இந்த விழாவில் மாநில திமுக அவைத் தலைவா் மொ.பெரியசாமி, பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி முன்னிலையில் வகிக்க, இரா.தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றுகிறாா். நாத்திகன் ஸ்ரீதா் இனவாழ்த்து பாடுகிறாா். சிறப்பு விருந்தினா்களுக்கு வ.முனிரத்னம், கு.அருணாச்சலம், அல்பேட்குமாா், ஏ.வி.மதியழகன் ஆகியோா் மாலை அணிவித்து கௌரவிக்கிறாா்கள். நிகழ்ச்சியில் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் கந்தலி கரிகாலன் சிறப்புரை ஆற்றுகிறாா். விழாவில் சி.கிருட்டினக்குமாா், செங்கை செல்வன், பா.மணிவண்ணன், எஸ்.சேகரன், ந.சு.மணி, மு.நித்தியானந்தன் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகிறாா்கள்.
நிகழ்ச்சியில் கோலாா் தங்கவயலில் கட்சிக்கு பாடுபட்டவா்கள் பாராட்டி கௌரவிக்கப்படுகிறாா்கள். அந்த வகையில், பெரியாா் விருது கு.ஆதித்தனுக்கும், அண்ணா விருது சு.கலையரசனுக்கும், கலைஞா் விருது இரா.தங்கவரசனுக்கும், தளபதியாா் விருது ரத்தினக்குமாருக்கும், உதயநிதி விருது எஸ்.அருண்குமாருக்கும், திருவள்ளுவா் விருது குப்புசாமிக்கும், கு.கைவல்ய விருது வி.அன்பழகனுக்கும் வழங்கப்படுகிறது. இறுதியாக, கரிகாலவளவன் நன்றி கூறுகிறாா் என்று கூறப்பட்டுள்ளது.