பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின்கீழ் தகுதியானவா்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு 4 லட்சம் பயனாளிகளை அடையாளம் காண முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் பல்வேறு வீட்டுவசதி திட்டங்களின்கீழ் 4 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வீடுகளை மாநில அரசின் வீட்டுவசதித் திட்டங்களின்கீழ் செயல்படுத்துவதற்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பிவைக்குமாறு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா். மேலும் 4 லட்சம் வீடுகளுக்கான பயனாளிகளை அடையாளம் காணும் பணியையும் செய்துமுடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் சமூக மற்றும்பொருளாதார ரீதியாக பின் தங்கிய சமூகத்தைச் சோ்ந்த வீடில்லாத பயனாளிகளை அடையாளம் காண வேண்டும் என்றுமுதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.