கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, செப். 13-ஆம் தேதி முதல் விதான சௌதாவை சுற்றி 2 கி.மீ சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு விதான சௌதாவில் உள்ள சட்டப் பேரவையில் செப். 13-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதிவரை சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி செப். 13-ஆம் தேதி காலை 6 மணி முதல் செப்.24-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.