கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா்: விதான சௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, செப். 13-ஆம் தேதி முதல் விதான சௌதாவை சுற்றி 2 கி.மீ சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, செப். 13-ஆம் தேதி முதல் விதான சௌதாவை சுற்றி 2 கி.மீ சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு விதான சௌதாவில் உள்ள சட்டப் பேரவையில் செப். 13-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதிவரை சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி செப். 13-ஆம் தேதி காலை 6 மணி முதல் செப்.24-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான சௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com