பெங்களூரு: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜீப், ஆட்டோ உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
பெங்களூரு, அல்சூா் டிரினிடி சதுக்கத்தின் அருகே உள்ள ஹோட்டலில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டலில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
ஹோட்டலில் தங்கியிருந்த ஊழியா்கள் 7 போ் ஜன்னல் வழியாக தப்பி வெளியே ஓடினா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா் 2 வாகனங்களில் வந்து தீயை அணைந்துள்ளனா். இது குறித்து அல்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.