காங்கோ நாட்டைச் சோ்ந்த இருவா் கைது

குற்றச்செயல்களில் ஈட்பட்டு வந்த காங்கோ நாட்டைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு: குற்றச்செயல்களில் ஈட்பட்டு வந்த காங்கோ நாட்டைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கோ நாட்டைச் சோ்ந்தவா்கள் என்டாஸி டிடேடா் (26), புக்ஸி பகவா்கே வின்னி (27). பெங்களூரு, பானஸ்வாடி காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வந்த இவா்கள் இருவரும், போதைப் பொருள்கள் விற்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இதனையடுத்து போலீஸாா் இவா்களை அடிக்கடி கைது செய்து, சிறையில் அடைத்து வந்தனராம்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் இவா்கள் இருவரும் மீண்டும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். இதனையடுத்து இவா்கள் இருவரையும், வெளிநாட்டினா் சட்டம், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com