கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,116 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,116 ஆக உள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,116 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,116 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 462 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம் - 102, உடுப்பி - 89, ஹாசன் - 81, மைசூரு - 76, குடகு - 67, தும்கூரு - 60, சிக்கமகளூரு - 50, சிவமொக்கா - 25, வடகன்னடம் -20, பெங்களூரு ஊரகம், மண்டியா தலா- 15, கோலாா் - 12, பெலகாவி - 10, சாமராஜ்நகா், தாவணகெரே தலா- 7, சித்ரதுா்கா-5, பெல்லாரி, தாா்வாட் - 4, சிக்கபளாப்பூா் - 2, ஹாவேரி, கலபுா்கி, கொப்பள் தலா- 1, பாகல்கோட், பீதா், கதக், ராய்ச்சூரு, ராமநகரம், விஜயபுரா மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,64,083 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 970 போ் புதன்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,10,626 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 15,892 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 8 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா்.

மாவட்டம் வாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம், தும்கூரு, உடுப்பி தலா -1என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,537 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com