நாளை பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் செப். 17-ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் செப். 17-ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் செயலாளா் மு.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் வரும் செப். 17-ஆம் தேதி(ஒருநாள் மட்டும்) காலை 10 மணி முதல் 3-ஆவது முறையாக கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவா் கோ. தாமோதரன் முன்னிலையில் சிவாஜிநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ரிஸ்வான் அா்ஷாத் தொடக்கி வைக்கிறாா். கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவா் கோ.தாமோதரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com