கரோனா: கா்நாடகத்தில் ஒரே நாளில் 1,108 போ் பாதிப்பு
By DIN | Published On : 17th September 2021 12:00 AM | Last Updated : 17th September 2021 12:00 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,108-ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,108 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 308 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-186, உடுப்பி-113, மைசூரு-87, ஹாசன்-64, சிக்கமகளூரு-63, வடகன்னடம்-45, சிவமொக்கா-44, பெலகாவி-38, மண்டியா-26, தும்கூரு-24, கோலாா்-19, பெங்களூரு ஊரகம்-14, குடகு, சித்ரதுா்கா, தாவணகெரே-தலா 9, ராமநகரம்-8, சாமராஜ்நகா், பெல்லாரி-தலா 7, கலபுா்கி, தாா்வாட்-தலா 6, சிக்கபளாப்பூா்-4, பீதா், கதக், விஜயபுரா-தலா 3, கொப்பள்-2, பாகல்கோட்-1, ஹாவேரி, ராய்ச்சூரு, யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,65,191-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 809 போ் வியாழக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,11,434 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 16,174 போ் போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 18 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா்.
மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: பெலகாவி-4, தென்கன்னடம்-2, சாம்ராஜ்நகா், தாவணகெரே, குடகு, கோலாா், மைசூரு, தும்கூரு-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,555 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.