கேளிக்கை நடனத்தில் ஈடுபட்ட 37 போ் கைது

போதைப் பொருள்களை பயன்படுத்தி, கேளிக்கை நடனத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு: போதைப் பொருள்களை பயன்படுத்தி, கேளிக்கை நடனத்தில் ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரகம், ஆனேக்கல் வட்டம் அருகே உள்ள தம்மநாயக்கனஹள்ளியில் கேளிக்கை விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு சிலா் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி, கேளிக்கை நடனத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், கேளிக்கை நடனத்தில் ஈடுபட்ட ரஷியா, கோவா, மும்பையைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட 37 பேரைக் கைது செய்து, 14 மோட்டாா் சைக்கிள், 7 காா்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில் கல்லூரி மாணவா்களும் அடங்குவா்.

இதுகுறித்து ஆனேக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகிண்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com