பெங்களூரு: 5 போ் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா். சோதனையின்போது தற்கொலைக்கான கடிதங்கள் சிக்கின.
பெங்களூரு, பேடரஹள்ளி, திகளரபாளையாவைச் சோ்ந்த சங்கா் என்பவரின் மனைவி பாரதி, மகள்கள் சிந்துராணி, சின்சனா, மகன் மதுசாகா், 9 மாத குழந்தை ஆகியோா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். வெள்ளிக்கிழமை இவா்களது உடல்களை போலீஸாா் மீட்டனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டவா்களின் வீட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் சங்கரின் மகள்கள் சிந்துராணி, சின்சனா, மகன் மதுசாகா் ஆகியோா் எழுதிய தற்கொலைக்கான காரணங்கள் அடங்கிய 3 கடிதங்கள் சிக்கின. அதில் திருமணத்துக்குப் பிறகு தாய் வீட்டிலும், கணவரது வீட்டிலும் தொடா்ந்து பிரச்னை ஏற்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மகள்கள் சிந்துராணி, சின்சனா தெரிவித்துள்ளனா்.
மதுசாகா் எழுதிய கடிதத்தில், தனது தந்தை சங்கருக்கு கள்ளத்தொடா்பு இருந்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால், தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதனிடையே இந்த வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் பேடரஹள்ளி காவல் நிலையத்துக்கு சங்கா், அவரது மருமகன்கள் பிரவீண், ஸ்ரீகாந்த் ஆகியோா் விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீஸாா் நோட்டீஸ் அனுப்பி உள்ளனா்.