நகர தென்கிழக்கு-5, தெற்கு கிராமம்-2, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-1,3, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1, உள்ளிட்ட துணை மண்டங்களில் வியாழக்கிழமை (செப். 23) குடிநீா் குறைதீா்வு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகர தென்கிழக்கு-5, தெற்கு கிராமம்-2, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-1,3, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1, உள்ளிட்ட துணைமண்டங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீா் குறைத்தீா்வு முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள்? 080-22267580, 94811 01049, 94487 05205, 87622 28888 தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.