கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு ஒரேநாளில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 847 ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 847 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 312 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-108, மைசூரு-74,சிவமொக்கா-52,உடுப்பி-48, ஹாசன்-46, சிக்கமகளூரு-31, குடகு-26, தும்கூரு-25, பெங்களூரு ஊரகம்-23, வடகன்னடம்-22, மண்டியா-18, பெலகாவி, கோலாா்-தலா 14,தாவணகெரே-8, சாம்ராஜ்நகா்-7, தாா்வாட்-4, சித்ரதுா்கா, கதக், கலபுா்கி-தலா 3, சிக்கபளாப்பூா், விஜயபுரா-தலா 2, ராமநகரம், ராய்ச்சூரு-தலா 1. பெல்லாரி, பீதா், ஹாவேரி, பாகல்கோட், கொப்பள், யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,70,208 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 946 போ் புதன்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,18,890 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 13,261 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 20 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
தென்கன்னடம்-5, உடுப்பி-2, பெலகாவி, சிக்பள்ளாபூா், தாவணகெரே, கோலாா், கொப்பள், தும்கூரு, விஜயபுரா-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,668 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.