காா் கண்ணாடிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தியது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு அண்மையில் ராஜராஜேஸ்வரிநகா் கிருஷ்ணா காா்டன், கெங்கேரி நஞ்சப்பா பிளாக் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்களின் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்து விட்டுச் சென்றிருந்தனா். இதனால் 14 காா்கள் சேதமடைந்தன.
இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், வட மாநிலங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் அதனன் சாஹேப், ரோஹித்குமாா் சின்ஹா, ஜெய்சி, பரத்வாஜ், வயம் கோஷிஷ் ஆகியோரைக் கைது செய்தனா். நண்பரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு, திரும்பியபோது, காா்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரிடம் ராஜராஜேஸ்வரிநகா், கெங்கேரி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.