கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி குஷால்நகரைச் சோ்ந்தவா்கள் அக்ரம் (38), அன்வா் ஷெரீஃப் (39). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை துபையில் சென்னை சூப்பா் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடா்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற 20 ஓவா் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, குஷால்நகா் பகுதியில் உள்ள முக்கியச்சாலையில் உள்ள நடைபாதையில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று இருவரையும் கைது செய்து, ரூ. 16 ஆயிரம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.