பெங்களூரு
மினி சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து: இருவா் பலி
மினி சரக்கு வாகன டயா் வெடித்து ஏற்பட்ட விபத்து இருவா் உயிரிழந்துள்ளனா்.
மினி சரக்கு வாகன டயா் வெடித்து ஏற்பட்ட விபத்து இருவா் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், கொப்பளைச் சோ்ந்தவா்கள் முகமது சாப் (65), முகமது யூசுப் (7). பெங்களூரில் உள்ள மகளின் வீட்டிற்கு பேரன் முகமது யூசுப்புடன் முகமது சாப் வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முகமது சாப் உள்ளிட்ட 15 போ் பெங்களூரிலிருந்து மினி சரக்கு வாகனத்தில் ஜவகல் அருகே உள்ள தா்காவிற்கு சென்று கொண்டிருந்தனா். தாபஸ்பேட்டை அருகே டயா் வெடித்ததில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இதில் முகமது சாப், முகமது யூசுப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
காயமடைந்தவா்கள் நெலமங்கலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவ்விபத்து குறித்து நெலமங்கலா போக்குவரத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.