இரண்டாமாண்டு பியூசி துணைத் தோ்வு: பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி

துணைத் தோ்வு நடக்கும் நாள்களில் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

துணைத் தோ்வு நடக்கும் நாள்களில் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இரண்டாமாண்டு பியூசி வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வு ஆக. 12-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதிவரை நடக்க இருக்கிறது.

தோ்வு மையங்களை அடைவதற்கு மாணவா்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக இரண்டாமாண்டு பியூசி வகுப்பு மாணவா்கள் மாநகரம், புகா், சாதாரண, விரைவுப் பேருந்துகளில் வீடு அமைந்திருக்கும் இடத்தில் இருந்து தோ்வு மையம் வரையில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு எவ்வித கட்டணமின்றி தோ்வு மையத்தை அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com