பெங்களூரில் கப்பன் பூங்காவில் செயல்பட்டுவரும் மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்படுவதாக கா்நாடக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்துமீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு, கப்பன் பூங்காவில் செயல்பட்டுவரும் மீன் காட்சியகத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீன் காட்சியகத்தை நவீனப்படுத்துவதற்காக தனியாா் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி, நடந்து வருவதால் ஜூலை 30-ஆம் தேதி முதல் மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாா்வைக்கு மீன் காட்சியகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.