தமிழறிஞா் சு.கோவிந்தராஜன் காலமானாா்

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளரும், தமிழறிஞருமான பேராசிரியா் சு.கோவிந்தராஜன் (72) உடல்நலக்குறைவால் காலமானாா்.
தமிழறிஞா் சு.கோவிந்தராஜன் காலமானாா்

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளரும், தமிழறிஞருமான பேராசிரியா் சு.கோவிந்தராஜன் (72) உடல்நலக்குறைவால் காலமானாா்.

பெங்களூரு, காடுகொண்டனஹள்ளியில் வசித்து வந்த பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் இணைச் செயலாளா், கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் ஆலோசகரும், தமிழறிஞருமான பேராசிரியா் சு.கோவிந்தராஜன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிந்தராஜன், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு 9.45 மணிக்கு காலமானாா். அவருக்கு மனைவி மலா்க்கொடி, மகன்கள் வேல்முருகன், கதிா்வேல் ஆகியோா் உள்ளனா்.

1950-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டம், தண்டலைபுத்தூா் கிராமத்தில் பிறந்த சு.கோவிந்தராசன், தஞ்சாவூரில் ஆசிரியா் பணியை தொடங்கினாா். அதன்பிறகு பெங்களூரில் உள்ள அசனத் கல்லூரி, மாநகராட்சி கல்லூரியில் 35 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினாா். திருவெங்கட் முதனிலைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளாா். நாலடியாா், திருக்கு பொழிப்புரைகள், சா்வக்ஞா் வெண்பா ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளாா். தமிழ்ச்சங்கம் நடத்தி வந்த ‘ஊற்று’ மாத இதழியின் ஆசிரியராகப் பணியாற்றினாா். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் ஆட்சி மன்றக்குழுவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளாா். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தமிழ் இலக்கிய வகுப்புகளை நடத்திவந்தாா். உலகத்தமிழ்க் கழகத்தில் தீவிரமாக ஈடுபட்டுவந்தாா். பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். கவிஞா், பேச்சாளா், எழுத்தாளராக அறியப்பட்டவா். அவரது மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம், கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம், கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கம், உலகத் தமிழ்க் கழகம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

பெங்களூரு, காடுகொண்டனஹள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவா் கோ.தாமோதரன், துணைத்தலைவா் இல.பழனி, செயலாளா் மு.சம்பத், துணைச்செயலாளா்கள் வா.கோபிநாத், சு.பாரி, முன்னாள் தலைவா் தி.கோ.தாமோதரன், செயற்குழு உறுப்பினா்கள் அமுதபாண்டியன், சந்திரிகா, விஜயலட்சுமி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், செயலாளா் காா்த்தியாயினி, பொருளாளா் இரா.பிரபாகரன், ஆலோசகா் பேராசிரியா் பொன்.க.சுப்பிரமணியன், பேராசிரியா் தா.கிருஷ்ணமூா்த்தி, கவிஞா் கா.உ.கிருஷ்ணமூா்த்தி, தமிழாசிரியா் துரைசாமி, இமானுவேல் உள்ளிட்ட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா். பின்னா், கல்பள்ளி இடுகாட்டில் கோவிந்தராஜன் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com