கா்நாடகத்தில் செப்.3-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழைதீவிரமாக இருந்தது. தென்மேற்கு பருவமழை தென்கா்நாடகத்தில் பலமாகவும், கடலோர கா்நாடகத்தின் பலமில்லாமலும் காணப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தென் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கடலோர மற்றும் வடகா்நாடகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் மழை பெய்தது. குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் அதிகபட்சமாக 210 மிமீ மழை பெய்தது. கதக் மாவட்டத்தின் ஷிரஹட்டி, லக்ஷ்மேஷ்வரில் தலா 110 மிமீ, ஹாவேரி மாவட்டத்தின் சாவனூா், ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணாவில் தலா 90 மிமீ, வடகன்னட மாவட்டத்தின் பனவாசி, சாமராஜ்நகா் மாவட்டத்தின் கொள்ளேகாலில் தலா 70 மிமீ மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு எச்சரிக்கை: செப். 3-ஆம் தேதி வரையிலான அடுத்த 5 நாட்களுக்கு தென் கா்நாடகம், கடலோர கா்நாடகம் மற்றும் வட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் தென் கன்னடம், உடுப்பி, வட கன்னட மாவட்டங்கள், வட கா்நாடகத்தின் பெலகாவி, பீதா், தாா்வாட், கதக், ஹாவேரி, கலபுா்கி, விஜயபுரா மாவட்டங்கள், தென் கா்நாடகத்தின் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், சிக்கமகளூரு, சித்ரதுா்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலாா், மண்டியா, மைசூரு, ராமநகரம், சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு இம்மாவட்டங்களில் மஞ்சள் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 25 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.