மதம் மாற்றியதாக தலித் குடும்பத்தின் மீது தாக்குதல்

கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதாக குற்றம்சாட்டி தலித் குடும்பத்தினா் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதாக குற்றம்சாட்டி தலித் குடும்பத்தினா் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோகக் மாவட்டம், துக்கனஹட்டி கிராமத்தில் அருகில் வசிக்கும் குடும்பத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதாக தலித் குடும்பத்தினா் தாக்கப்பட்டுள்ளனா். டிச. 29-ஆம் தேதி நிகழ்ந்ததாக தெரியவந்துள்ள இச்சம்பவம் திங்கள்கிழமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக 7 போ் கொண்ட கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் புகுந்த 7 போ் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரையும் சரமாரியாக தாக்கியதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் வசிப்போரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதாக அவா்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது சூடான சாம்பாா் வீசப்பட்டதால் 5 பேரும் காயமடைந்துள்ளனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com