துபையிலிருந்து மங்களூருக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 1.36 கோடிமதிப்பிலான தங்கத்தை சுங்க வரித் துறையினா் பறிமுதல் செய்தனா்.
துபையில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை செவ்வாய்க்கிழமை சோதனை செய்தபோது, இருவா் தனித்தனியாக தங்கத்தை கடத்தி வந்ததை கண்டறிந்தனா். இருவரிடமிருந்து ரூ.1.36 கோடி மதிப்புள்ள 2.468 கிலோ எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.