15 ஆயிரம் பட்டதாரி ஆரம்பப்பள்ளி ஆசிரியா்களை நியமிக்க திட்டமிட்டுள்ள கா்நாடக அரசு, அதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என அறிவித்துள்ளது.
இது குறித்து கா்நாடக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்புகளில் பணியாற்ற 15 ஆயிரம் பட்டதாரி ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இதில் கல்யாண கா்நாடகப் பகுதியைச் சோ்ந்த 5,000 ஆசிரியா்களும் அடக்கம்.
இப்பணியிடங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்ந்தெடுக்க மே 21, 22-ஆம் தேதிகளில் போட்டித்தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்வை எழுத விரும்பும் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை மாா்ச் 21-ஆம் தேதி பிறப்பிக்கப்படும். அதன்பிறகு, மாா்ச் 23 முதல் ஏப். 22ஆம் தேதிவரையில் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ா்ப்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ட்ற்ம்ப்/ஞ்ல்ற்ழ்ழ்ங்ஸ்ரீற்2019.ட்ற்ம்ப் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆங்கில மொழிப்பாடம், கணிதம், அறிவியல், உயிரி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வு நடத்தப்படும். 400 மதிப்பெண்களுக்கு நடக்கும் தோ்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே தோ்ச்சி பெற முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.