கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டைக் காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தோ்வுக் காலத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வாழ்விடத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி ஏப்.11-ஆம் தேதிவரை இலவசமாக பயணிக்கலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.