பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 15) கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சாா்பில் பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரில் உள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில் மே 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு மாதாந்திர கருத்தரங்கம் தொழிற்சங்கத் தலைவா் மகிழ்நன் தலைமையில், சங்கத்தலைவா் கோ.தாமோதரன், செயலாளா் மு.சம்பத் முன்னிலையில் நடக்கவிருக்கிறது. பத்மநாபன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, சண்முகம் அனைவரையும் வரவேற்க, அ.ம.ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாா். இக்கருத்தரங்கத்தில் ‘புரட்சியில் பூத்த செம்மலா்கள்’ என்ற தலைப்பில் சங்க அறிஞா்கள், கவிஞா்கள் பேசுகிறாா்கள். இறுதியில் கா.சு.பாரி நன்றி கூறுகிறாா். மேலும் விவரங்களுக்கு 080-25510062 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.