இன்று குடிநீா் குறைதீா் முகாம்

பெங்களூரில் வியாழக்கிழமை (செப்.15) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

பெங்களூரில் வியாழக்கிழமை (செப்.15) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளைத் தீா்த்து வைக்க குறைதீா்முகாம்களை நடத்திவருகிறது.

பெங்களூரில் தெற்கு கிராமம்-2, தென்கிழக்கு-5, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-3, கிழக்கு கிராமம்-1, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1 துணை மண்டல அலுவலகங்களில் செப்.15-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 11மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீா்வு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 87622-28888, 1916 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com