பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானைச் சோ்ந்த 19 வயது பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பாகிஸ்தானைச் சோ்ந்த இக்ரா ஜீவானி (19) என்ற பெண், இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லை வழியாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறாா். உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த 25 வயதான முலாயம்சிங் யாதவை விளையாட்டு செல்லிடப்பேசி செயலி வழியாக சந்தித்திருக்கிறாா்.
இருவரும் காதலித்துள்ளனா். பின்னா் திருமணம் செய்துகொண்டுள்ளனா். நேபாளத்திற்கு வந்து அங்கு திருமணம் செய்துகொண்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளாா். இருவரும் பிகாரில் தங்கியிருந்தனா்.
பாதுகாவலராகப் பணியாற்றிய முலாயம் சிங் யாதவ், தனது மனைவி இக்ரா ஜீவானியை பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளாா். ஜுன்னசந்திராவில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனா்.
இக்ரா ஜீவானிக்கு ராவா யாதவ் என்ற பெயரைச்சூட்டி ஆதாா் அட்டை பெற்றிருக்கிறாா். அதன்பின்னா் கடவுச்சீட்டு பெறவும் விண்ணப்பித்திருக்கிறாா். பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினரை தொடா்புகொள்ள இக்ரா ஜீவானி முயற்சித்தபோது, அது குறித்துதகவல் அறிந்த மத்திய உளவுப் படையினா் கா்நாடக உளவுப் பிரிவுக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில் கா்நாடக போலீஸாா் அவரது வீட்டை சோதனையிட்டனா். அவா்களை விசாரித்த போலீஸாா் இக்ரா ஜீவானியையும் அவரது கணவரையும் கைதுசெய்தனா். உடனடியாக இக்ரா ஜீவானியை வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.