புதிய கல்லூரி அறிவிப்பு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காஞ்சிபுரம், ஜன. 8:  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பெ.விஸ்வநாதன் பொதும
Updated on
1 min read

காஞ்சிபுரம், ஜன. 8:  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பெ.விஸ்வநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திருப்போரூர் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் பெ.விஸ்வநாதன் ஏற்கனவே மனு அளித்திருந்தார். இங்கு கல்லூரி அமைவதாக இருந்தால் கட்டடப் பணிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்க தயாராக உள்ளதாக தனபாக்கியம் நடராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன் திருப்போரூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள்

தீனதாயளன், காயார் மோகனராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com