ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், பிப். 10: சென்னையில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்டதைக் கண்டித்து திருவள்ளூரில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். ÷சென்னை பாரிமுனையி
Published on
Updated on
1 min read

திருவள்ளூர், பிப். 10: சென்னையில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்டதைக் கண்டித்து திருவள்ளூரில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

÷சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை மாணவனால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

÷இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு உரிய பணிப்பாதுகாப்பு தரவேண்டும். ஆசிரியர்களைத் தாக்குவோருக்கு கடும் தண்டனை தரும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரில் நூற்றுக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

÷பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆர்.குப்புசாமி, நெடுஞ்செழியன், ஞானசேகரன், செல்வகுமாரி, செல்வணேகன், சம்பந்தன் உள்பட பலர் பேசினர்.

÷இதில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், உடற்கல்வி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com