நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
போயஸ் தோட்டம் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.
அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், நவம்பா் மாதம் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியை ஏ.சி.சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளாா்.