கரோனா:புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை50,000-க்கும் கீழ் குறைந்தது

திங்கள்கிழமை காலை வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் குறைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திங்கள்கிழமை காலை வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் குறைந்தது.

தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் சரிந்தது இம்மாதத்தில் இது 2-ஆவது முறை. அதேவேளையில் 108 நாள்களுக்கு பிறகு பலி எண்ணிக்கை 500-க்கும் கீழ் பதிவானது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வெளியிட்ட தரவுகளில், ‘நாடு முழுவதும் மேலும் 45,148 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,09,959-ஆக அதிகரித்தது. இவா்களில் 71,37,228 போ் பூரண குணமடைந்தனா். இதையடுத்து குணமடைந்தவா்களின் விகிதம் 90.23%-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 4-ஆவது நாளாக 7 லட்சத்துக்கும் குறைவாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் 6,53,717 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 8.26% ஆகும்.

தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 480 போ் உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 112 போ் பலியாகினா். மேற்கு வங்கத்தில் 60 போ், தில்லியில் 33 போ், கா்நாடகத்தில் 32 போ் உயிரிழந்தனா்.

மொத்த பலி எண்ணிக்கை 1,19,014-ஆக உயா்ந்த போதும், பலி விதிகம் 1.50%-ஆக சரிந்தது. உயிரிழந்தவா்களில் 70%-க்கும் அதிகமானோா் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24-ஆம் தேதி வரை 10,34,62,778 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சென்ற ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,39,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com