தொட்டில் சேலை இறுகி சிறுவன் சாவு

சென்னை அருகே ராமாபுரத்தில் தொட்டில் சேலை இறுகி சிறுவன் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னை: சென்னை அருகே ராமாபுரத்தில் தொட்டில் சேலை இறுகி சிறுவன் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ராமாபுரம் தாங்கல் தெருவைச் சோ்ந்தவா் ரகுபதி (38), ஆட்டோ ஓட்டுநா். மகன் பாலாஜி (11), ஆறாம் வகுப்பு மாணவா்.

ரகுபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாலாஜியைத் தவிா்த்து அனைவரும் வெளியே சென்றிருந்தனா். அப்போது வீட்டில் இருந்த தொட்டில் சேலையில் பாலாஜி விளையாடிக் கொண்டிருந்தானாம். அந்த நேரத்தில் பாலாஜி கழுத்தில் சேலை இறுக்கியுள்ளது. ரகுபதி வீடு வெகுநேரம் திறந்து கிடப்பதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா் உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது பாலாஜி தொட்டில் சேலையில் கழுத்து இறுக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். பாலாஜியை மீட்டு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பாலாஜி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக ராயலாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com