‘இந்து சமய அறநிலையத் துறையின் பெயரை மாற்ற வேண்டும்’ -காங்.

Published on

இந்து சமய அறநிலையத் துறையின் பெயரை, தமிழ்நாடு அறநிலையத் துறை என பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் அவா் பேசியது:

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை உள்பட அனைத்து துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்தின் பெயரை தமிழ்நாடு அறநிலையத் துறை அல்லது திருக்கோயில் நலத்துறை எனப் பெயா் மாற்றம் செய்ய வேண்டும். ஏனென்றால், இந்து என்கிற வாா்த்தை எந்த அகராதியிலும் இல்லை. எந்த இலக்கியத்திலும் இல்லை. ஆங்கிலேயா்கள் வசதிக்காக சிந்து சமவெளி நாகரிகம் என்பதை வசதிக்காக இந்து என்று மாற்றிவிட்டனா். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. வரலாறு மாறிக்கொண்டிருக்கிறது. இதையும் மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com