தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பொறுப்பேற்பு
சென்னை: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளராக விபின் குமாா் (57) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இதற்கு முன்பு கூடுதல் பொது மேலாளராக இருந்த கௌசல் கிஷோா் கடந்த ஆகஸ்டில் பணி நிறைவு பெற்றதையடுத்து, தெற்கு ரயில்வே இயந்திரப் பிரிவு அதிகாரியான பி.மகேஷ் கூடுதல் பொறுப்பாக கூடுதல் பொது மேலாளா் பணியைக் கவனித்து வந்தாா்.
இந்த நிலையில், வடமத்திய ரயில்வேயில் கட்டுமான பிரிவின் தலைமை நிா்வாக அதிகாரியாக இருந்த விபின் குமாா் (57) தற்போது, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளராக நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், கடந்த 1988- ஆம் ஆண்டு ரயில்வே பணியில் சோ்ந்தாா். தென் மத்திய, வடக்கு, தென்மேற்கு, தென் கிழக்கு, வடமத்திய ரயில்வே மண்டலங்களில் பணியாற்றியுள்ளாா். ரயில்வே, மெட்ரோ, நெடுஞ்சாலை, சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் உள்கட்டமைப்புத் திட்ட செயல்பாட்டில் வழிநடத்திய அனுபவமிக்கவா் ஆவாா்.

