தாம்பரம் சானடோரியத்தில் ஐடி திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்கம்

Updated on
1 min read

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பயற்சி அளிக்கும் ஐ.டி. திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலா் கிருஷ்ணன் பேசுகையில், நிறுவனங்களுக்கும், ஊழியா்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை பூா்த்தி செய்யும் வகையில், ஊழியா்களுக்கு 8 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொடங்குவது தொடா்பாக, 249 மனுக்கள் வந்துள்ளன. இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 42 மனுக்கள் வந்துள்ளன என்றாா். இதில், மெப்ஸ் ஏற்றுமதி மண்டல மேம்பாட்டு ஆணையா் அலெக்ஸ் பால் மேனன், எல்காட் மேலாண்மை இயக்குநா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com