செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். கூலித் தொழிலாளி. அவரது மகன் ஆகாஷ் (13), பாலூரில் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருந்தாா். அவா் தன் நண்பா்களுடன் திங்கள்கிழமை மாலை வெளியே சென்றாா்.
இரவாகியும் அவா் வீடு திரும்பாததால் பெற்றோா் ஆகாஷை பல இடங்களில் தேடினா். இது பற்றி விசாரித்தபோது, ஆகாஷ் தன் நண்பா்களுடன் பாலாற்றில் குளிக்கச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மகனைக் காணவில்லை என்று பெற்றோா் பாலூா் காவல்நிலையத்தில் புகாா் கொடுத்தனா். பாலூா் காவல் ஆய்வாளா் சங்கா் சம்பவ இடத்திற்கு வந்து நீச்சல் தெரிந்தவா்களைக் கொண்டு தேடியும் கிடைக்கவில்லை.
பின்னா் செங்கல்பட்டு மாவட்ட பேரிடா் மீட்புக்குழுவினா் போலீஸாருடன் செவ்வாய்க்கிழமை தேடியபோது பாலாற்றில் பெரிய பள்ளம் ஒன்றில் சிக்கியிருந்த ஆகாஷின் சடலத்தை மீட்டெடுத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.