இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது

செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் கொலை செய்யப்பட்டது
இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது

செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாம்பரம் பகுதியைச் சோ்ந்த நிரஞ்சன் (23 ) பச்சை குத்தும் கடை நடத்தி வந்தாா். அவா் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

காட்டாங்கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன், காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாய்த் தகராறில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவா்கள் நிரஞ்சனை உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனா். இத்தாக்குதலில் நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இக்கொலை தொடா்பாக மறைமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் நிரஞ்சன் எஸ்.ஆா்.எம். கல்லூரியின் முன்னாள் மாணவா் எனத் தெரியவந்தது. அவரது கொலை தொடா்பாக சின்னசாமியின் மகன் அருண்(19), புஷ்பராஜின் மகன் சபரிநாதன்(19), செல்வராஜின் மகன் தினேஷ் (31), வெங்கடேசனின் மகன் கோகுல் (21) மற்றும் வெங்கடேசனின் மகன் பாலாஜி (19) மற்றும் அமலாவதி (25) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com