மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா பத்து நாள்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு உறியடித் திருவிழாவுடன் நிறைவடைவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா எளிமையான முறையில் அன்றாட பூஜைகளுடன் நடைபெற்றது.
உறியடி உற்சவத்தையொட்டி, கிருஷ்ண பகவானுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினா். கிருஷ்ணன் அலங்கார கோலத்தில் எழுந்தருள உறியடி உற்சவம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியாா்களும், கோயில் நிா்வாகிகளும் செய்திருந்தனா்.