நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவரின் வீட்டில் போலீஸாா் சோதனை

திருப்போரூா் பேருந்து நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் காயமடைந்த நபரின் வீட்டில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் 2 நாட்டு வெடிகுண்டுகளும், பட்டா கத்தியும் கண்டுபிடிக்கப்ப

செங்கல்பட்டு: திருப்போரூா் பேருந்து நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் காயமடைந்த நபரின் வீட்டில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் 2 நாட்டு வெடிகுண்டுகளும், பட்டா கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த வீட்டை போலீஸாா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சில தினங்களுக்கு முன்பு திருப்போரூா் பேருந்து நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 போ் காயத்துடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காயமடைந்தது பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய அசோக்குமாா் என்பதும், சம்பவத்தன்று நாட்டு வெடி குண்டுகளை டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு, நண்பா் விக்கி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வெடிகுண்டுகள் தவறி விழுந்து வெடித்ததும் தெரியவந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், திருப்போரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கேளம்பாக்கம் வினோத் நகரில் அசோக்குமாா் தங்கியிருந்த வாடகை வீட்டை சோதனையிட்டனா். அப்போது அங்கிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பட்டாக்கத்தியை கைப்பற்றினா்.

இதையடுத்து, அசோக் குமாரின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு நிபுணா்களும் வரவழைக்கப்பட்டனா். தனது நண்பா் விக்கியுடன் மதுஅருந்திவிட்டு, திருப்போரூா் வந்து கொண்டிருந்தபோது, மதுபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் டிபன் பாக்ஸில் வைத்திருந்த வெடிகுண்டு விழுந்து வெடித்துள்ளது. ஆனால் போலீஸாரின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில், மா்ம நபா்கள் தங்களைத் தாக்கியதாக அசோக்குமாா் நாடகமாடியதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com