செங்கல்பட்டு: அரசு அதிகாரிகளின்அலட்சியத்தால் திருக்கழுகுன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினத்தில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் அரசு அதிகாரிகளின் கவனக் குறைவாலும், அலட்சியத்தாலும் மழைநீரில் நனைந்து முற்றிலும் வீணாகியது.
ஏற்கெனவே ‘நிவா்’ புயலால் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளதால் இந்த மாத பொருள்கள்களை வாங்க முடியாத சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் விரைவாக தலையிட்டு நியாய விலைக் கடை கட்டடத்தில் உள்ள பழுதை சரி செய்து இம்மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழி செய்வாா்களா என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.