செங்கல்பட்டு: உலக நன்மைக்காக வேண்டி மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் மஹா சண்டி யாகம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கோபூஜை நடைபெற்றது. கலசபூஜை, நவசண்டி பாராயணத்துடன் நவகிரக ஹோமம், பூா்ணாஹுதி மகா தீபாராதனையும் பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது.
மாமல்லபுரம், பூஞ்சேரி, மணமை, கடும்பாடி, பட்டிக்காடு உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த ஏராளமானோா் வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எம்.கோதண்டபாணி, டி. செல்வமணி, டிஜெகதீசன், எம்.ஜி.மனோகரன், ராஜசேகரன், எம். ஆனந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.