செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா்.
பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பேச இருப்பதையொட்டி, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் செய்தித் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை வருகிறாா்.
பின்னா், காலை 11 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள திடலில் விவசாயிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் சென்னைக்குச் சென்று அங்கிருந்து அவா் தில்லிக்கு விமானம் மூலம் திரும்புகிறாா்.