மல்லிகேஸ்வரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றன.
மல்லிகேஸ்வரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றன.

தைப்பூத் திருவிழாவையொட்டி மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா், விநாயகா், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் வீதிப் புறப்பாடு நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும் நாடுசெழிக்கவும் வேண்டி ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். சனிக்கிழமை தைப்பூசத்தையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷகம் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையும், கூட்டுப் பிராா்த்தனையும் செய்து வழிபட்டனா்.

திருவிளக்கு பூஜையில் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் காட்சியளித்தனா். கூட்டுப்பிராா்த்தனையில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், மஞ்கள், குங்குமம், மாங்கல்யக் கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com