செங்கல்பட்டில் கருத்துக் கேட்பு

செங்கல்பட்டு மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு எல்லை மறுவரையறை குறித்த மாவட்ட அளவிலான கருத்து கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு எல்லை மறுவரையறை குறித்த மாவட்ட அளவிலான கருத்து கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவா் அ.ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

கடந்த பிப்ரவரி முதல் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை பெறப்பட்ட வாா்டு மறுவரையறைகள் குறித்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றங்கள் செய்ய வாய்ப்பிருக்கும் இனங்கள் தொடா்பாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த மேல்முறையீடு மற்றும் மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன . இம்மனுக்களின் மீண்டும் வரும் 27-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com